Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் கொரோனா இல்லாத மாநிலம்: 24 மணி நேரத்தில் ஒரு கேஸ் கூட இல்லை!

இந்தியாவில் கொரோனா இல்லாத மாநிலம்: 24 மணி நேரத்தில் ஒரு கேஸ் கூட இல்லை!
, திங்கள், 1 மார்ச் 2021 (09:34 IST)
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து நாடு முழுவதும் ஆறு மாதங்களுக்கு மேல் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இருந்தாலும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இன்னும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா இல்லாத மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த மாநிலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை
 
மேலும் சிகிச்சையில் இருந்த மூன்று பேரும் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பதால் தற்போது அங்கு ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக ஸ்டாலினை வியந்து வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன் டுவீட்