Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Siva
ஞாயிறு, 24 நவம்பர் 2024 (12:30 IST)
மணிப்பூரில் எம்எல்ஏக்களின் வீட்டிற்கு தீ வைத்த 41 பேர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்து சேதம் விளைவித்ததாக ஏற்கனவே 34 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்று மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டதால், மொத்தமாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு முதல் கலவரம் நடைபெற்று வருகின்றது. இந்த கலவரத்தில் அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், போராட்டத்தின் உச்சகட்டமாக நவம்பர் 16 ஆம் தேதி மணிப்பூர் முதல்வரின் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கினார்கள்.  மேலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. இதுவரை தீவைப்பு சம்பந்தமாக 41 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments