Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேளிக்கை விடுதியில் வாக்குவாதம்....இளம்பெண் கார் ஏற்றிக் கொலை

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (15:17 IST)
ஜெய்ப்பூரில் உமா என்பவரை கார் ஏற்றிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய மங்கேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் உமா. இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் உள்ள  இரவு நேர கேளிக்கை விடுதிக்கு தன் காதலனுடன் சென்றுள்ளார்.

அப்போது விடுதியை விட்டு வெளியே வத உமாவுக்கும், மற்றொரு தம்பதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, உமாவும், அவரது காதலனும் அந்த  தம்பதியிடம் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த தம்பதி தங்கள் காரில் ஏறி செல்லும்போது, உமாவும், அவரது காதலனும் காரை மறித்துள்ளனர்.

அந்த காரை ஓட்டிய மங்கேஷ் காரை வேகமாக இயக்கிய நிலையில், உமா கார் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். உமாவின் காதலன் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
இதில், உமா சம்பவ இடத்திலேயே உடல்  நசுங்கி பலியானார்.

இதையடுத்து உமாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உமாவை கார் ஏற்றிக் கொண்டு தப்பியோடிய மங்கேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments