மீண்டும் நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (13:48 IST)
திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி  மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன மழை பெய்ததால் நான்கு மாவட்ட மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். 
 
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தான் மேற்கண்ட நான்கு மாவட்டங்களும் படிப்படியாக வெள்ளத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
 
இந்த  நிலையில் மீண்டும் தென்மாவட்டங்களில்  மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. கன்னியாகுமாரி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து மேற்கண்ட 3 மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments