Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோதுமை மாவில் வெடிமருந்து -மீண்டும் ஒரு வாயில்ல ஜீவனுக்கு நடந்த கொடுமை!

கோதுமை மாவில் வெடிமருந்து -மீண்டும் ஒரு வாயில்ல ஜீவனுக்கு நடந்த கொடுமை!
, ஞாயிறு, 7 ஜூன் 2020 (08:40 IST)
இமாச்சல பிரதேசத்தில் கோதுமை மாவில் வெடிமருந்து கலந்து கொடுக்கப்பட்டு அதை சாப்பிட்ட பசுவின் வாயில் வெடித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் கர்ப்பமாக இருக்கும் யானை ஒன்று அன்னாசி பழத்தில் வெடிவைத்து கொடுக்கப்பட்டு, அதை சாப்பிட்டு பலியானது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்மந்தமாக இணையத்தில் கண்டனங்கள் எழுந்தன. மேலும் இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் இதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியில், கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிடும் போது பசுவின் வாயிலேயே வெடித்து வாய்ப்பகுதி சிதைந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்களை பசுவின் உரிமையாளர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் காண்போரை அதிர்ச்சி கொள்ள செய்யும் விதமாக உள்ளது. சமீபகாலமாக நம் நாட்டில் விலங்குகள் மீதான கொடூரங்கள் அதிகமாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்… ஆனால் இந்த நிபந்தனைகள் உண்டு!