Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.300 கோடியில் இன்னொரு சூரிய கோவில்: ஒடிசாவில் கட்டுமானம் ஆரம்பம்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (07:00 IST)
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் உலகப்புகழ் பெற்ற சூரிய கோவில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கோவிலின் கோபுரத்தின் உயரம் தான் காண்போரை ஆச்சரியப்பட வைக்கும்

இந்த நிலையில் இதே வடிவத்தில் மற்றொரு சூரிய கோவில் கட்ட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.300 கோடியில் உருவாகவுள்ள இந்த கோவிலுக்காக 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு சமீபத்தில் பூமி பூஜையும் நடந்துள்ளது.

பத்ம விபூஷண் விருது பெற்ற ரகுநாத் மகபத்ரா வடிவமைக்கவுள்ள இந்த கோவிலுக்கான புளுபிரிண்ட் தயாராகிவிட்டதாகவும், இந்த கோவில் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ ஜெகன்னாதர் மற்றும் கோனார்க்கில் உள்ள சூரிய கோவில் ஆகியவற்றை வடிவமைத்த முன்னோர்கள் கொண்ட பரம்பரை குடும்பத்தினை சேர்ந்தவர் தான் இந்த கோவிலுக்கு வடிவமைத்த ரகுநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments