மீண்டும் ஒரு ஆணவக் கொலை – கழுத்தை நெறித்து மகளைக் கொன்ற பெற்றோர் !

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (08:58 IST)
ஆந்திராவில் தன் விருப்பப்படி காதல் திருமணம் செய்துகொண்ட மகளை பெற்றோர் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திராவில் குப்பம் என்ற பகுதிக்கருகில் ரெட்லப்பள்ளி எனும் கிராமத்தில் வெங்கடேஷ், அமராவதி எனும் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தனா என்ற 17 வயது மகள் உள்ளார். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த பிரபு என்ற மேஸ்திரி வேலை செய்யும் 19 வயது இளைஞனுக்கும் கடந்த 3 வருடங்களாக காதல் இருந்துள்ளது.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு வீட்டில் மறுப்பு இருந்துள்ளது. அதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் தனது மகளை தேடி கண்டுபிடித்த சந்தனாவின் பெற்றோர், அவரை வீட்டுக்கு அழைத்து வந்து மனமாற்றம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் சந்தனா பிரபுவோடுதான் வாழ்வேன் என பிடிவாதமாக சொல்லிவிட்டதால் அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி தங்கள் வயலில் வைத்து எரித்துக் கொன்றுள்ளனர்.

இது சம்மந்தமாக சந்தனாவின் கணவர் பிரபு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் சந்தனாவின் பெற்றோரைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments