Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு ஆணவக் கொலை – கழுத்தை நெறித்து மகளைக் கொன்ற பெற்றோர் !

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (08:58 IST)
ஆந்திராவில் தன் விருப்பப்படி காதல் திருமணம் செய்துகொண்ட மகளை பெற்றோர் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திராவில் குப்பம் என்ற பகுதிக்கருகில் ரெட்லப்பள்ளி எனும் கிராமத்தில் வெங்கடேஷ், அமராவதி எனும் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தனா என்ற 17 வயது மகள் உள்ளார். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த பிரபு என்ற மேஸ்திரி வேலை செய்யும் 19 வயது இளைஞனுக்கும் கடந்த 3 வருடங்களாக காதல் இருந்துள்ளது.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு வீட்டில் மறுப்பு இருந்துள்ளது. அதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் தனது மகளை தேடி கண்டுபிடித்த சந்தனாவின் பெற்றோர், அவரை வீட்டுக்கு அழைத்து வந்து மனமாற்றம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் சந்தனா பிரபுவோடுதான் வாழ்வேன் என பிடிவாதமாக சொல்லிவிட்டதால் அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி தங்கள் வயலில் வைத்து எரித்துக் கொன்றுள்ளனர்.

இது சம்மந்தமாக சந்தனாவின் கணவர் பிரபு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் சந்தனாவின் பெற்றோரைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments