தமிழ்நாட்டிலும் ஷிண்டே, அஜித் பவார்கள் உள்ளனர்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (08:16 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிண்டே, சிவசேனா கட்சியை உடைத்து பாஜக ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் இருக்கும் நிலையில் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அஜித் பவார் என்பவரும் ஆளுங்கட்சியில் இணைந்துள்ளார். அவர் நேற்று துணை முதலமைச்சராக பதவி ஏற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் உள்ளனர் என நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் பாஜகவின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்த நிலையில் இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் இருந்தது போலவே தமிழ்நாட்டிலும் ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் உள்ளனர் என்றும் அதனால் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு உதறல் எடுத்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அவர் யாரை மனதில் வைத்து ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் உள்ளனர் என்று கூறினார் என்பது குறித்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: கூட்டணி உறுதியாகிறதா?

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments