Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டிலும் ஷிண்டே, அஜித் பவார்கள் உள்ளனர்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (08:16 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிண்டே, சிவசேனா கட்சியை உடைத்து பாஜக ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் இருக்கும் நிலையில் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அஜித் பவார் என்பவரும் ஆளுங்கட்சியில் இணைந்துள்ளார். அவர் நேற்று துணை முதலமைச்சராக பதவி ஏற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் உள்ளனர் என நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் பாஜகவின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்த நிலையில் இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் இருந்தது போலவே தமிழ்நாட்டிலும் ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் உள்ளனர் என்றும் அதனால் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு உதறல் எடுத்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அவர் யாரை மனதில் வைத்து ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் உள்ளனர் என்று கூறினார் என்பது குறித்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலியான பாலியல் பலாத்காரம் புகார்.. பெண் ஐடி ஊழியர் கைது..!

10 ஆண்டுகளுக்கு முன் தாய் அவமதிப்பு.. காத்திருந்து பழிவாங்கிய மகன்.. சினிமா போல் ஒரு சம்பவம்..!

துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம்: இரு அவைகளும் அமளியால் ஒத்திவைப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன் பதிவு டாக்சிகளுக்கு ஆன்லைன் வசதி: பயணிகளுக்கு பெரும் நிம்மதி!

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments