Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தேசிய கட்சி: நாடு முழுவதும் போட்டியிட அன்னா ஹசாரே திட்டம்?

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (05:31 IST)
சமூக போராளியான அன்னா ஹசாரே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வழிநடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தின் பயனாகத்தான் டெல்லி முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில் மீண்டும் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராடத்தை துவக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த முறையும் அவர் மத்திய அரசை எதிர்த்து போராடவுள்ளார்.

நேற்று கர்நாடக மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வலுவான லோக்பால் சட்டம் ஒன்றுதான் ஊழலை ஒழிக்க உதவும் என்றும், இந்த சட்டம் குறித்த நடவடிக்கையை பிரதமர் மோடியே முன்னின்று எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

ஊழலையும், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளையும் முடிவுக்குக் கொண்டுவர தேசிய அளவிலான இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க மக்கள் தன்னிடம் வேண்டுகோள் விடுத்து வருவதாகவும், இதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எனவே வரும் பொதுத்தேர்தலில் அன்னா ஹசாரேவின் இயக்கமும் நாடு முழுவதும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments