Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஞ்சநேயர் ஜாதி சான்றிதழ் கேட்டு மனு: உபியில் பரபரப்பு

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (08:49 IST)
ஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒருவர் மனு கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆஞ்சநேயர் ஒரு காட்டுவாசி என்றும், அவர் ஒரு தலித் என்றும், ராமனுக்கான கடமை முடியும்வரை ஓய்வின்றி உழைக்கவேண்டும் என்று முடிவெடுத்தவர் என்றும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். தெய்வங்களையும் ஜாதி ரீதியாக பிரிக்கும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த பேச்சுக்கு முதல்வர் யோகி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தேசிய பழங்குடியின தலைவர் நந்த் கிஷோர் சாய் என்பவர் ஆஞ்சநேயர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்தான், அவர் தலித் அல்ல என்று முதல்வர் தெரிவித்துள்ளதால் அவரது  சாதி சான்றிதழை தனக்கு வழங்கவேண்டும் என வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் தனக்கு ஒரு வாரத்துக்குள் ஆஞ்சநேயர் சாதி சான்றிதழை தராவிட்டால் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments