Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானியர்களும் பன்றிகளும் உள்ளே நுழைய கூடாது: இந்தூரில் வைக்கப்பட்ட போர்டு..

Siva
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (09:41 IST)
பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா முழுவதும் பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில், இந்திய மக்கள் பல்வேறு வகைகளில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் புகழ்பெற்ற உணவுத் தெரு ஒன்று உள்ளது. அந்த தெருவின் நுழைவாயிலில், பாகிஸ்தான் ராணுவ தலைவரின் புகைப்படத்தை பன்றியாக மாற்றி, “பன்றிகளும் பாகிஸ்தானியர்களும் இந்த தெருவில் வரக்கூடாது” என எழுதப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாகிஸ்தான் மீதான இந்தியர்களின் கோபத்தை இந்த போர்டு வெளிப்படுத்துவதாகவும், “இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்” என்றும் அந்த தெருவில் உணவகங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
 
மேலும், அந்த பகுதியில் உள்ள ஒரு பெரிய பணக்காரர், “ஒரு பயங்கரவாதியை கொன்றால் ஒரு கோடி தரப்படும், 100 பயங்கரவாதிகளை கொன்றால் 100 கோடி தருவேன்” என்றும் கூறியிருப்பது அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவசர அவசரமாக ஸ்ரீநகர் சென்ற ராணுவ தலைமை தளபதி.. அடுத்த என்ன நடக்கப் போகிறது?

எல்லையில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூடு.. போர் தொடங்கிவிட்டதா?

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! டூர் ப்ளானை கேன்சல் செய்யும் ஆயிரக்கணக்கான மக்கள்!

பஹல்காம் தாக்குதல் தேர்தல் நேர அரசியலா? பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ கைது!

சீறும் ஏவுகணைகள்.. பாயும் ரஃபேல் விமானங்கள்! இந்திய ராணுவம் தீவிர பயிற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments