Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சனம்.. நாளை முதல் இலவச டிகெட்டிகள்!

tirupathy
, புதன், 28 டிசம்பர் 2022 (18:27 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் அங்கப்பிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் நாளை முதல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும்  ஜனவரி மாதத்தில் அங்கப்பிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள்  நாளை காலை 9 மணி முதல் தேவஸ்தான இணையதளத்தில் வெளியாகும் என்றும், முன்னுரிமை அடிப்படையில்தான் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 1 முதல் 14 ஆம் தேதி வரையிலும்,  28 ஆம் தேதி தவிர மற்ற அனைத்து நாட்களிலும் ஆன்லைனில் டிக்கெட்டுகல் விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதை அனைத்து பக்தர்களும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்ட டி.ஆர்.பி!