Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ்அப் செயலி மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்.. விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 21 ஜனவரி 2025 (12:49 IST)
வாட்ஸ்அப் செயலி மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் சேவையை விரைவில் தொடங்க இருப்பதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. இம்மாத இறுதியில் இந்த சேவை சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் என்றும் அதன் பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றது முதல், ஆந்திராவில் பல்வேறு புதுப்புது அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக வாட்ஸப் செயலி மூலம் இனி பிறப்பு இறப்பு சான்றிதழை மிகவும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான சேவையை வாட்ஸ்அப் செயலி மூலம் வழங்குவதால் மக்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும் என்றும், இந்த நோக்கத்தை கொண்டு தான் முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார் என்றும் தலைமைச் செயலாளர் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.

இந்த சேவையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு பஞ்சாயத்து, மருத்துவம், நகராட்சி நிர்வாக துறைகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

இனி தமிழ்நாடு முழுக்க ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் வருவாங்க!? - மு.க.ஸ்டாலின் பக்காவா போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுப்பு தொடக்கம்.. 48 மணி நேரத்தில் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments