Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ்அப் செயலி மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்.. விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 21 ஜனவரி 2025 (12:49 IST)
வாட்ஸ்அப் செயலி மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் சேவையை விரைவில் தொடங்க இருப்பதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. இம்மாத இறுதியில் இந்த சேவை சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் என்றும் அதன் பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றது முதல், ஆந்திராவில் பல்வேறு புதுப்புது அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக வாட்ஸப் செயலி மூலம் இனி பிறப்பு இறப்பு சான்றிதழை மிகவும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான சேவையை வாட்ஸ்அப் செயலி மூலம் வழங்குவதால் மக்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும் என்றும், இந்த நோக்கத்தை கொண்டு தான் முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார் என்றும் தலைமைச் செயலாளர் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.

இந்த சேவையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு பஞ்சாயத்து, மருத்துவம், நகராட்சி நிர்வாக துறைகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments