கேரளா, ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (16:20 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் தமிழகத்தைப் போலவே அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தின் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தற்போது பார்ப்போம் 
 
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 29,704 என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை என்றும் 89 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 1,15,982 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்று ஒரே நாளில் 34,296 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
அதேபோல் இன்று ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 24,171 என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை என்றும் 101 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,35,491 என்றும் அம்மாநிலத்தில் 2,10,436 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments