Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு மீண்டும் கைதா? ஆந்திர ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (15:37 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடுவுக்கு 3 வழக்குகளில் முன்ஜாமீன் அளிக்க ஆந்திர ஐகோர்ட் மறுத்துள்ளது.
 
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சிறையில் உள்ளார்.
 
அவரது நீதிமன்ற காவல் இரு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு  தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் அமராவதியில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட், அங்கல்லூ கலவர வழக்கு ஆகிய 3 வழக்குகளில் அவர் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று கூறப்படும் நிலையில் அவரது சார்பில் முன்ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டது.
 
ஆனால் அவரின் 3 முன்ஜாமீன் மனுக்களையும் ஆந்திர ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments