Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15,000 - எந்த மாநிலத்தில் தெரியுமா?

Webdunia
திங்கள், 17 மே 2021 (10:50 IST)
கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15,000 வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் தமிழகத்தைப் போலவே அதிகரித்து வருகிறது. இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 24,171 என்றும் ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை என்றும் 101 அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,35,491 என்றும் அம்மாநிலத்தில் 2,10,436 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15,000 வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த நிவாரண தொகையை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இத்தொகை மூலம் கண்ணியமான முறையில் இறுதி சடங்கு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments