Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”என்னோடு உறவு கொண்டால் சக்தி கிடைக்கும்?” – பெண்களை சீரழித்த போலி பாபா கைது!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
ஆந்திராவில் தன்னோடு உறவு வைத்து கொண்டால் நேர்மறை சக்திகள் கிடைக்கும் என பெண்களை ஏமாற்றிய போலி பாபாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் நந்திகாமா பகுதியை சேர்ந்தவர் விஸ்வ சைதன்யா. ஐதராபாத்தில் கடந்த 2002ம் ஆண்டில் கம்ப்யூட்டர் மையம் நடத்திய இந்த நபர் சீட்டு பிடிப்பதாக கூறி பொதுமக்களிடம் ரூ.1 கோடி ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்துள்ளார். பின்னர் தன்னை சாய் பாபா பக்தனாக மாற்றி கொண்டு பெயரையும் சாய் விஸ்வ சைதன்யா என மாற்றி கொண்ட நபர் சாய் ச்சர்வஸ்வாமு மான்சி தொண்டு அறக்கட்டளை என்று ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார்.

பின்னர் தனி ஆசிரமம் அமைத்த இந்த போலி பாபா தன்னுடன் பெண்கள் உறவு கொண்டால் நேர்மறை சக்திகள் கிடைக்கும் என்று பல பெண்களை தனது ஆசை வலையில் வீழ்த்தி ஏமாற்றியுள்ளார். இதுதவிர போலியான பொருட்களை ஆன்மீக பொருட்கள் என அதிக விலைக்கு விற்பது, சிறப்பு பூஜை என பணக்காரர்களிடம் காசு கறப்பது என பல மோசடி செயல்களில் ஈடுபட்ட இந்த போலி பாபா மீது பலர் புகாரளித்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments