Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டி உங்கள புதைச்சிட்டோமே..! உயிருடன் வந்த பாட்டி! – ஆந்திராவில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (10:47 IST)
ஆந்திராவில் கொரோனாவால் இறந்ததாக மூதாட்டி புதைக்கப்பட்ட நிலையில் மறுநாள் அவர் உயிருடன் வந்த சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜக்கய்யாப்பேட்டையை சேர்ந்த 70 வயது மூதாட்டி கிரிஜம்மா. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிஜம்மா அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 12ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. உறவினர்கள் முன்னிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சில நாட்கள் கழித்து திடீரென வீட்டிற்கு வந்த கிரிஜம்மா தான் கொரோனாவிலிருந்து குணமாகி விட்டதாகவும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். அவரை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிரிஜம்மாவுக்கு பதிலாக வேறொருவர் உடல் தவறாக ஒப்படைக்கப்பட்டதை உணர்ந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments