Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டி உங்கள புதைச்சிட்டோமே..! உயிருடன் வந்த பாட்டி! – ஆந்திராவில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (10:47 IST)
ஆந்திராவில் கொரோனாவால் இறந்ததாக மூதாட்டி புதைக்கப்பட்ட நிலையில் மறுநாள் அவர் உயிருடன் வந்த சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜக்கய்யாப்பேட்டையை சேர்ந்த 70 வயது மூதாட்டி கிரிஜம்மா. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிஜம்மா அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 12ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. உறவினர்கள் முன்னிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சில நாட்கள் கழித்து திடீரென வீட்டிற்கு வந்த கிரிஜம்மா தான் கொரோனாவிலிருந்து குணமாகி விட்டதாகவும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். அவரை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிரிஜம்மாவுக்கு பதிலாக வேறொருவர் உடல் தவறாக ஒப்படைக்கப்பட்டதை உணர்ந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அரசு சொத்தை வக்பு சொத்து என ஆக்கிரமித்து மசூதி கட்டிய விவகாரம்: நீதிமன்றம் அதிரடி..!

பொது இடங்களில் மாஸ்க் அவசியம்.. கேரள முதல்வர் அறிவுறுத்தல்.. தமிழகத்தின் நிலை என்ன?

மனைவியிடம் அடிவாங்கியதை வெளியே தெரியாமலிருக்க என்ன செய்ய வேண்டும்: பிரெஞ்ச் பிரதமருக்கு டிரம்ப் அறிவுரை..!

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments