Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்து என நினைத்து கையெறி குண்டில் விளையாட்டு! – பாகிஸ்தானில் சிறுவர்கள் பலி!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (10:30 IST)
பாகிஸ்தானில் கையெறி குண்டை விளையாடும் பந்து என நினைத்து விளையாடிய சிறுவர்கள் குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் குவேட்டா நகரின் குடியிருப்பு பகுதியில் கையெறி குண்டு ஒன்று கிடந்துள்ளது. அதை விளையாடும் பந்து என நினைத்த அப்பகுதி சிறுவர்கள் மூவர் அதை வைத்து விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கையெறி குண்டு வெடித்ததில் மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குடியிருப்பு பகுதியில் கையெறி குண்டு எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments