Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்மொழி மட்டுமல்ல, 10 மொழிகளை மாணவர்களுக்கு ஊக்குவிப்பேன்: சந்திரபாபு நாயுடு..!

Mahendran
வியாழன், 6 மார்ச் 2025 (10:05 IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இருமொழி கொள்கை மட்டுமே தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்றும், மும்மொழிக்கு இடமே இல்லை என்றும் கூறிவரும் நிலையில், அண்டை மாநிலமான ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மும்மொழி மட்டுமல்ல, 10 மொழிகளைப் படிக்கக்கூட மாணவர்களை ஊக்குவிப்பேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து அவர் கூறிய போது, "மொழி என்பது தகவல் தொடர்பு மட்டுமே; மொழி வேறு, அறிவு வேறு. உலக அளவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒளிர்வதை அனைவரும் அறிவீர்கள். பல்கலைக்கழகங்களில் சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை ஊக்குவிக்க உள்ளேன். 
 
தெலுங்கு மட்டுமல்ல, பல மொழிகளில் மாணவர்கள் எந்த மொழியையும், எத்தனை மொழியையும் படிக்கலாம். எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம். உங்கள் சேவை அனைவருக்கும் தேவை. தெலுங்குவைப் பாதுகாக்க வேண்டும். அதேசமயம், ஆங்கில மொழியையும் ஊக்குவிக்க வேண்டும். ஹிந்தி மொழியை கற்றுக் கொள்வது நல்லதே; அதனால் நாம் மக்களிடம் எளிதாக பழக முடியும்," என்று தெரிவித்தார்.
 
தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு கொள்கை கடந்த 50 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அண்டை மாநிலத்தில் ஹிந்தியை கற்றுக் கொள்ளலாம் என்று ஆந்திர முதல்வர் கூறியிருப்பது விவாதத்திற்குரிய நிலையை உருவாக்கியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments