Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனல்மின் நிலையங்கள் இழுத்து மூடப்படும்! – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (12:47 IST)
நாட்டில் நிலவும் மாசுப்பாட்டை குறைக்க பல இடங்களில் அனல்மின் நிலையங்களை மூட உள்ளதாக பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் காற்று பெரும் மாசுபாட்டை சந்தித்துள்ள நிலையில் மாசுபாடுகளை கட்டுக்குள் கொண்டு வர அனல்மின் நிலையங்களை மூட இருப்பதாக பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகை 10 லட்சத்துக்கு அதிகமாக உள்ள நகரங்களில் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த 4 ஆயிரத்து 400 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகமான மாசு ஏற்படுத்தும் அனல்மின் நிலையங்களை மூட அரசு திட்டமிட்டிருப்பதாக அரசு கூறியிருக்கும் நிலையில் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு மாற்று வழி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அனல்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்ய அதிகளவிலான நிலக்கரி எரிக்கப்படுவதால் காற்றில் கார்பன் புகை அதிகம் கலந்து சுற்றுசூழல் மாசுப்பாட்டை அதிகமாக்குகிறது.

அதேசமயம் நாட்டில் மின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பவையாக அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவற்றை இழுத்து மூட உத்தேசித்திருக்கும் அரசு மாற்று வழியையும் யோசித்திருக்கலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments