Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓயாமல் குடித்த தந்தை; நேரம் பார்த்து புகுந்த 70 வயது தாத்தா; சீரழிக்கப்பட்ட 11 வயது சிறுமி

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (13:25 IST)
மும்பையில் 70 வயது முதியவர் ஒருவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை குர்கான் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் அபார்ட்மெண்டில் வசித்து வந்தார். சிறுமியின் தாயார் வேலையில் இருப்பதால் வெளியூரில் வசித்து வந்தார்.
 
அந்த சிறுமியின் தந்தைக்கு பக்கத்து ஃப்ளாட்டில் வசித்து வந்த 70 வயது முதியவருடன் நட்பு இருந்துள்ளது. இருவரும் சேர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 
 
அப்படி சமீபத்தில் இருவரும் ஒன்றாய் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறி சிறுமியின் தந்தை தூங்கிவிட்டார். இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொண்ட 70 வயது முதியவர் அந்த சிறுமியை சீரழித்துள்ளார்.
 
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் போன் செய்து தெர்விக்கவே, ஆட்டம் கண்டுபோன அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் அந்த முதியவரை கைது செய்தனர். கூடா நட்பு கேடாய் விளையும் என்பார்கள். தந்தையின் கேடுகெட்ட நட்பால் சிறுமியின் வாழ்க்கை சீரழிந்து போன சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்