பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பிரபல நடிகரை கைது செய்த போலீஸார்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (11:11 IST)
சபரிமலைக்குள் செல்ல முயற்சிக்கும் பெண்களை இரண்டு துண்டாக்க வேண்டும் என சர்ச்சையான கருத்தை கூறிய நடிகர் கொல்லம் துளசியை கைது செய்தனர்.
 
உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் உள்ளே செல்லலாம் என தீர்ப்பளித்தது. அதன்படி பெண்கள் சபரிமலைக்குள் சென்று ஐயப்பனை தரிசனமும் செய்தனர்.
 
இந்நிலையில் இந்த தீர்ப்பு வந்த புதிதில் மலையாள நடிகரும், பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டி ஒரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டை டெல்லிக்கும் அனுப்ப வேண்டும் என பேசினார்.
 
இவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. போலீஸார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரனை நடைபெற்று வந்த நிலையில் போலீஸார் நேற்று கொல்லம் துளசியை அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments