Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதங்களில் 10 பேரை கொலை செய்த சைகோ கொலையாளி கும்பமேளாவில் கைது

Webdunia
ஞாயிறு, 27 ஜனவரி 2019 (07:58 IST)
உத்தரப்பிரதேசத்தில் 6 மாதங்களில் 10 பேரை கொலை செய்த சீரியல் கொலையாளி, அலகாபாத் கும்பமேளாவில் சிக்கினான்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரின்  சாலையோரங்களில்  தூங்குபவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்கள். கடந்த ஜனவரி 10-ம் தேதி கைத்காஞ் பகுதியில் திரிவேனி தர்ஷன் ஓட்டல் பகுதியில் கழுத்தை அறுபட்ட நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார்.
 
ஜனவரி 18-ம் தேதி சாலையோர நடைபாதையில் படுத்து உறங்கிய மூன்று பேர் கொடூர தாக்குதலால் படுகாயம் அடைந்தனர். சமீபத்தில் கும்பமேளா பகுதியிலும் இரவு நேரத்தில் ஒருவரும் இறந்துகிடந்தார். தொடர் கொலையை மேற்கொண்டு வந்த சைகோ கொலையாளியை .கண்டுபிடிக்க, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொலையாளி அடையாளம் காணப்பட்டான். இதனையடுத்து அவனை தேடிய போலீசார் கும்பமேளா நடக்கும் பகுதியில் கைது செய்துள்ளனர். 
 
 கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து இதுவரை 10 பேரை இந்த சைகோ கொலையாளி கொலை செய்துள்ளான். அவனிடம் இருந்து கூர்மையான ஆயுதம், மரக்கட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments