Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் ஒட்டக பாலில் டீ குடிக்கலாம் – அமுல் அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (14:41 IST)
இந்தியா முழுவதும் ஒட்டகப் பாலை விநியோகிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அமுல் நிறுவனம்.

இத்தனை நாளாக ஆட்டுப்பால், மாட்டுப்பால், கழுதைப்பால் உள்பட பலவற்றை தமிழ்நாட்டில் உபயோகித்து வந்துள்ளார்கள். ஆனால் இந்த ஒட்டகப் பால் என்பதை வடிவேலு நகைச்சுவைக் காட்சியில் கேள்விப்பட்டுள்ளதை தாண்டி சுவைக்க வாய்ப்பு கிடைத்ததில்லை. துபாய் போய்வரும் ஊர்க்காரர்கள் ஒட்டகப் பாலின் மகிமைகளை பற்றி ஊருக்குள் பேசி திரிவதையும் பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு.

இந்நிலையில் பால் உற்பத்தியில் இந்தியாவின் முதன்மையான நிறுவனமான அமுல் ஒட்டகப் பால் விநியோகத்தை இந்தியா முழுவதும் விரிவுப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமுல் நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குனர் ஆர்.எஸ்.சோதி ”முதல் முயற்சியாக 200 மி.லி ஒட்டகப் பால் பாட்டில்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இதன் விலையை 25 ரூபாயாக நிர்ணயம் செய்து உள்ளோம். இதற்கான பணிகள் காந்திநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சில வாரங்களில் ஒட்டகப் பால் விற்பனைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments