Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளம் தப்பி செல்லும் அம்ரித்பால் சிங்? – எல்லையில் சோதனை தீவிரம்!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (09:03 IST)
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் கொள்கையை பரப்பி வரும் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேபாளத்திற்கு தப்பி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத கொள்கையுடன் செயல்பட்டு வரும் “வாரிஸ் பஞ்சாப் டி” அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங். கடந்த சில காலமாக பொது அமைதியை குலைக்கும் வகையில் இந்த இயக்கம் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 18ம் தேதி முதல் இந்த இயக்கம் மீதும், அம்ரித்பால் சிங் மீதும் போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீஸார் முயற்சி செய்து வரும் நிலையில் ஆங்காங்கே இயக்க ஆதரவாளர்கள் உதவியுடன் அம்ரித்பால் சிங் தப்பி சென்று போலீஸ்க்கு தண்ணி காட்டி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அம்ரித்பால் சிங் நேபாளத்திற்கு சென்று பதுங்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அம்ரித்பால் சிங்கை பிடிக்க நேபாள அரசு உதவ வேண்டும் என இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட நேபாள அரசு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதேசமயம் இந்திய – நேபாள எல்லையிலும் பாதுகாப்பு சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக அம்ரித்பால் தப்பி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாட்டு எல்லையில் இருக்கும் வீரர்கள் உஷாராக இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments