Publish Date: Tue, 02 Nov 2021 (17:26 IST)
Updated Date: Tue, 02 Nov 2021 (17:27 IST)
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்து அம்ரிந்தர்சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த கேப்டன் அம்ரிந்தர்சிங் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் அதன் பின்னர் புதிய முதல்வர் நியமனம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் முதல்வர் பதவியில் இருந்து விலகிய அம்ரிந்தர்சிங் அவர்கள் பாஜகவில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது என்பதும் இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாகவும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் முன்னாள் பஞ்சாப் அம்ரிந்தர்சிங் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். விரைவில் அவர் பாஜகவில் சேரும் தகவல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.