பாட்னாவில் தற்போது புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது; அமித்ஷா

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (13:10 IST)
பீகார் தலைநகர் பாட்னாவில் தற்போது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாட்னாவில் தற்போது புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டல் அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது ’2024 ஆம் தேதி மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்றும் மீண்டும் இந்தியாவின் பிரதமர் மோடி தான் என்பதை உறுதியாக சொல்லுகிறேன் என்று அமித்ஷா தெரிவித்தார். 
 
மேலும் தற்போது பாட்னாவில் புகைப்படம் எடுக்கும் போட்டோஷூட் நிகழ்ச்சி தான் நடைபெற்று வருகிறது என்றும் அது எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார் 
 
எதிர்க்கட்சிகளால் கூட மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூற முடியாது என்றும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி நமது ராணுவர்களை கொன்றனர். ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி உள்ளது என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments