Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமானார்; மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (17:25 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமித்ஷா குணம் ஆகி விட்டதாக வதந்தி ஒன்று கிளம்பியது. பாஜக எம்பி மனோஜ் திவாரி தனது டுவிட்டரில் தவறான தகவலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த உறுதி செய்யப்பட்ட தகவலின் படி மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனா நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்ததில் மூன்றிலும் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளதை அடுத்து அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியதை அடுத்து பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments