கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : அமித்ஷா உறுதி

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (12:25 IST)
பாஜகவினர் சிலைகளை சேதப்படுத்தினால் கட்சிரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் நேற்று முன்தினம் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது. இது குறித்து எச்.ராஜா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், நாளை சாதி வெறியர்  ஈவேரா சிலை அகற்றப்படும்  என தெரிவித்திருந்தார். இதனால் பெரியார் சிலை ஒருசில இடங்களில் மர்ம நபர்கள் சேதபடுத்தியுள்ளதால் தமிழகம் முழுவதும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சிலைகள் சேதப்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார், அதில் ”தமிழகம் மற்றும் திரிபுராவிலுள்ள பாஜக கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளேன். சிலைகள் சேதப்படுத்தும் சம்பவத்தில் பாஜகவினர் ஈடுபட்டால். அவர்கள் மீது கட்சிரீதியான நடவடிக்கை எடுக்கபடும்” என தெரிவித்துள்ளார். 
 
இதனையடுத்து திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய முத்துராமன் என்பவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளை மாளிகையில் டிரம்ப் வைத்த கிறிஸ்துமஸ் விருந்து.. ’தசாவதாரம் பட நடிகை பங்கேற்பு..!

சென்னை வரைவு வாக்காளர் பட்டியல்.. கொளத்தூரில் 1 லட்சம்.. சேப்பாக்கத்தில் 89 ஆயிரம் பெயர்கள் நீக்கம்..!

வங்கதேசம் போல் தான் மேற்குவங்கமும் உள்ளது.. சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக விமர்சனம்..!

விஜய் வரவால் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பா? என்ன சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..!

சேலத்தில் மக்கள் சந்திப்பு!.. தேதி குறித்த விஜய்!... தவெகவினர் உற்சாகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments