Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தால் கைது செய்து கொள்ளுங்கள்: மம்தாவுக்கு அமித்ஷா சவால்

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (07:50 IST)
மேற்குவங்க மாநிலத்தலைநகர் கொல்கத்தாவில் பாஜகவின் பிரமாண்டமான பேரணி ஒன்றை வரும் 11ஆம் தேதி நடத்த பாஜக திட்டமிட்டுள்ள நிலையில் இந்த பேரணிக்கு மேற்குவங்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தடையை மீறி, கொல்கத்தா சென்ற்து பேரணியை நடத்தவுள்ளதாகவும் முடிந்தால் தன்னை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கைது செய்து பார்க்கட்டும் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து நேற்று அமித்ஷா அளித்த பேட்டியின்போது கூறியதாவது: கொல்கத்தாவில் பாஜக பேரணியை திட்டமிட்டபடி, நடத்தியே தீருவோம். பேரணி நடத்தினால் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு, என்னை கைது செய்வதாக கூறியுள்ளது. இந்த விஷயத்தில் நான் மம்தாவுக்கு சவால் விடுக்கிறேன். முடிந்தால், என்னை கைது செய்து பார்க்கட்டும் என்று கூறினார். 
 
அமித்ஷாவின் இந்த சவாலுக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, '''மேற்கு வங்கத்தில் எங்கு வேண்டுமானாலும், அமித் ஷா செல்லட்டும். அவரை யாரும் தடுக்கப் போவதில்லை,'' என்று கூறினார். அதே நேரத்தில் அமித்ஷா கைது செய்யப்படுவது குறித்து அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments