Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம் இல்லம் காலி - மூட்டை முடிச்சுகளை கட்டி கிளம்பிய உத்தவ் தாக்கரே!

சிம் இல்லம் காலி - மூட்டை முடிச்சுகளை கட்டி கிளம்பிய உத்தவ் தாக்கரே!
, வியாழன், 23 ஜூன் 2022 (08:42 IST)
உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் உள்ள முதல்வருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை நேற்றிரவு காலி செய்தார். 

 
மகாராஷ்டிராவில் முன்னதாக நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. அதுமுதல் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்து வருகிறார். 
 
இதனிடையே சிவசேனாவில் கட்சி உட்பூசல் ஏற்பட்ட நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 40 பேருடன்  அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றார். இதனால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை நேற்றிரவு காலி செய்தார். அரசு இல்லத்தில் இருந்து உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தினருடன் பந்த்ராவில் உள்ள சொந்த வீடானா மாதோஸ்ரீ பங்களாவிற்கு குடிபெயர்ந்தார். மாதோஸ்ரீ இல்லம் முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி உத்தவ் தாக்கரேவை வரவேற்று முழக்கங்கள் எழுப்பினர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயோத்தி வந்த ராமாயண எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாலை மரியாதை செய்த பக்தர்கள்!