Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனரக வாகனங்களில் ஆயுதம்... இந்தியா உருவாக்கும் எதிரிகள் நுழைய முடியா சாலை !!

Advertiesment
இந்தியா
, திங்கள், 7 செப்டம்பர் 2020 (09:04 IST)
இந்தியா எல்லையில் முக்கிய சாலை ஒன்றை அமைக்கும் பணியின் பெரும்பகுதியை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக எல்லையில் இந்தியா - சீனாவிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டாலும் எதுவும் கைக்கொடுப்பதாய் இல்லை. இந்நிலையில் இந்தியா எல்லையில் முக்கிய சாலை ஒன்றை அமைக்கும் பணியின் பெரும்பகுதியை நிரைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த சாலை எந்த சர்வதேச எல்லைகளுக்கும் அருகில் இல்லாதால் அண்டை நாடுகளால் இதனை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என கூறப்படுகிறது. இந்த சாலை, பாதுகாப்புப்படையினருக்கான போக்குவரத்துக்கும், அதிக எடைகொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லும் கனரக வாகனங்கள் பயணிக்கவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது 280 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: அரசியலுக்காக பயன்படுத்துகிறதா பாஜக?