Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு: ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (12:47 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் நேரில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி போரை நிறுத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து அமெரிக்க ஊடகங்கள் இந்திய பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 
இந்தியா உள்பட 8 நாடுகள் கலந்துகொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை தனிமையில் சந்தித்த பிரதமர் மோடி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதனை புதினும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது
 
 இந்த நிலையில் உக்ரேன் போரை நிறுத்த இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. இந்தியாவின் தலைவர் புதினுடன் இப்போது இது போருக்கான காலம் அல்ல என்று கூறியது மிகவும் ஆரோக்கியமானது என்று தி வாஷிங்டன் போஸ்ட் உள்பட அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments