Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் சென்ற நோயாளி.. மின்கம்பத்தில் மோதியதால் கருகி பலி..!

Mahendran
செவ்வாய், 14 மே 2024 (12:55 IST)
அறுவை சிகிச்சை செய்வதற்காக அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சுலோச்சனா என்ற நோயாளி சென்ற நிலையில் அவர் சென்ற ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதியதை அடுத்து ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததாகவும் அதில் அந்த நோயாளி கருகி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் சுலோச்சனா என்ற 57 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தார். 
 
இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி தீ பிடித்தது. இதில் பெண் நோயாளி, ஓட்டுநர், மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இருந்த நிலையில் மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் நோயாளி சுலோச்சனா மட்டும் தீயில் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மில்லி மீட்டர் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைப்பது எப்போது? தேசிய தேர்வு முகமை தகவல்..!

டீசல் பேருந்துகள் CNG பேருந்துகளாக மாற்றம்! - போக்குவரத்துக் கழகம் எடுத்த முடிவு!

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments