Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?

Mahendran
செவ்வாய், 14 மே 2024 (12:45 IST)
சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பியதாக பெலிக்ஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில்  கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருடைய வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுக்கு சங்கர் வழக்கில் பெலிக்ஸ் சேர்க்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து சமீபத்தில் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார் என்பதும் அதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பெலிக்ஸை 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீசார் இன்று சோதனை செய்து வருகின்றனர்.

சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டி குறித்து ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவை இருக்கிறதா என்று தேடுதல் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments