Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராயின் கண்களைப் போல் ஜொலிக்கும்-பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (13:07 IST)
மகாராஷ்டிரம்  மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் தினமும் மீன் சாப்பிட்டால்  நடிகை ஐஸ்வர்யா ராயின் கண்கள் போன்ற கண்களைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஹிண்டே தலைமையிலான சிவசேனா (எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

வடக்கு மராட்டியத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில பழங்குடியின அமைச்சர் விஜய்குமார் காவித், தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு சருமம் மிருதுவாகவும், ஐஸ்வர்யா ராயின் கண்களைப் போன்ற கண்களைப் பெறலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், 'ஐஸ்வர்யா ராய் பெங்களூரு அருகே கடலோர நகரத்தில் வசித்து வந்தார். அவர் மீன் சாப்பிடுவது வழக்கம். அவர்கள் கண்களும் தோலும் அழகாக இருக்கும்… நீங்களும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் கண்களைப் போன்ற கண்களைப் பெறலாம்' என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments