Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தணிந்ததா தாக்குதல் பதற்றம்? மீண்டும் துவங்கிய விமான சேவை

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (16:09 IST)
நேற்று இந்தியா எல்லை தாண்டி பாலகோட் எனும் பகுதியில் நடத்தியத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
 
அடுத்தடுத்த இரண்டு நாட்களில் இருநாடுகளும் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்திவருவதால் இரு நாடுகளிலும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. 
 
இரு நாடுகளும் வான்வழித் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள காரணத்தால் இந்தியா தனது எல்லையோரப்பகுதிகளில் உள்ள விமான நிலையங்களை மூட முடிவு செய்தது. அதுபோல இந்தியா பாகிஸ்தான் இடையிலான விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. 
 
இந்நிலையில், நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அதாவது 8 விமான நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய விமான சேவை மீண்டும் துவங்கியுள்ளது. இதன் மூலம் வான்வழித் தாக்குதல் ஏதும் நடக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments