Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏர்லையே யோகா செய்து அசத்திய விமானப்படை வீரர்கள்

ஏர்லையே யோகா செய்து அசத்திய விமானப்படை வீரர்கள்
, வெள்ளி, 22 ஜூன் 2018 (12:19 IST)
விமானப்படை வீரர்கள் யோகா தினத்தை முன்னிட்டு வானத்தில் மிதந்தபடி யோகா செய்து அசத்தியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. பொதுச்சபை கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும்  சர்வதேச யோகா தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் அன்றைய தினம் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று 4-வது ஆண்டாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று இந்திய விமானப்படை வீரர்களான சன்யால் மற்றும் கஜானந்த் யாதவ் இருவரும் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து குதித்து யோகா செய்து அசத்தினர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவலரைத் தாக்கிய நாம்தமிழர் மதன்குமார் குண்டர் சட்டத்தில் கைது