Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்ச்சையாக மாறிய விமான பணிப்பெண்ணின் மரணம்

சர்ச்சையாக மாறிய விமான பணிப்பெண்ணின் மரணம்
, வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (06:50 IST)
மேகாலயா மாநிலத்தை சேர்ந்த கிளாரா 22 வயது இளம் விமான பணிப்பெண் கோங்சிட் கடந்த செவ்வாய் அன்று கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் உள்ள 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.



 
 
தனியார் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இவர் மரணம் அடைந்த அடுத்த நாள்தான் அதாவது புதன்கிழமை காலை தான் மரணமடைந்த நிலையில் அவரது உடல் அபார்ட்மென்டின் கீழே கண்டெடுக்கப்பட்டது. 
 
இவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்று போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது முதல்கட்ட விசாரணையில் அவர் மரணம் அடைந்த அன்று அவரது அபார்ட்மெண்டில் நண்பர் ஒருவரின் பிறந்த நாளை அவர் கொண்டாடியதாகவும், அவருடன் மேலும் சிலர் அந்த அபார்ட்மெண்டில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து மேலும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறிய போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே விசாரணையின் அடுத்தகட்டம் தொடங்கும் என்று தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்ப அந்த ரூ.10 கோடி வாடகை உண்மைதானா?