Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்தி வாசிப்பாளர் ஆனது லிசா என்னும் ஏஐ தொழில்நுட்பம்.. இந்த வேலையும் போச்சா?

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (15:58 IST)
ஏஐ தொழில்நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில் தற்போது செய்தி வாசிப்பாளர் துறையிலும் நுழைந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம் ஒன்று ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லிசா என்னும் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தி உள்ளது 
 
இந்த ஏஐ தொழில்நுட்ப செய்தி வாசிப்பாளர் ஆங்கிலம் மற்றும் ஒடிசா மொழிகளில் செய்தியை வாசிக்கின்றது. அதுமட்டுமின்றி 18 மொழிகளில் லிசா செய்தி வாசிக்கும் திறமை உள்ளது என்றும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே பல்வேறு துறைகளில் மனிதர்களின் வேலையை ஏஐ தொழில்நுட்பம் பறித்துள்ள நிலையில் தற்போது செய்தி வாசிப்பாளர் துறையிலும் நுழைந்து விட்டதால் அந்த துறையில் உள்ள பணியாளர்களின் வேலையும் பறிபோக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments