Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் தோல்வி அடைந்த இரோம் ஷர்மிளா தமிழக எல்லைக்கு திடீர் விசிட் ஏன்?

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (04:07 IST)
சமீபத்தில் நடைபெற்ற மணிப்பூர் மாநில தேர்தலில் 16 ஆண்டுகள் சிறையில் இருந்த  மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளா அம்மாநில முதல்வரை எதிர்த்து போட்டியிட்டு வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேர்தல் தோல்வியால் மனம் விரக்தி அடைந்த அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த கையோடு மன அமைதிக்காக கேரளாவில் உள்ள அட்டப்பாடிக்கு வருகை தந்துள்ளார்.



 


தமிழக, கேரள எல்லைப் பகுதியான அட்டப்பாடியில் பழங்குடியின மக்கள் அதிகளவு வசிக்கின்றனர். இவர்களிடையே ஒரு மாதம் வரை தங்கி, ஓய்வு எடுக்க, இரோம் ஷர்மிளா திட்டமிட்டுள்ளார். இதற்காகவே, தற்போது அவர் அங்கு வந்துள்ளார் என்று, கூறப்படுகிறது.

கேரளாவுக்கு வந்த இரோம் ஷர்மிளாவுக்கு அப்பகுதி பழங்குடி இன மக்கள் பெரும் வரவேற்பை அளித்தனர். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தன்னுடைய சமூக சேவையும் அநீதிக்கு எதிரான போராட்டமும் தொடரும் என்றும் மாணவர்களை வழிநடத்தவுள்ளதாகவும் அவர் பழங்குடி இனமக்களிடம் தெரிவித்தார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments