Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்கு பிறகு வன்கொடுமை குற்றமில்லை: உள்துறை அமைச்சகம்

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (11:46 IST)
18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் திருமணத்துக்கு பிறகு வன்கொடுமைக்கு உட்பட்டால் அது குற்றமாகாது என்று உள்துறை அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மேற்கோள் காட்டியுள்ளது.


 

 
திருமணத்துக்கு பிறகு 15 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வன்கொடுமைக்கு உட்பட்டால் அது குற்றமில்லை என்று உள்துறை அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து விளக்கமளித்த உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:-
 
குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டிருந்தாலும், சமூகத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைப்பெற்றுதான் கொண்டிருக்கிறது. பொருளாதாரம் மற்றும் கல்வி அடிப்படையில் நாட்டில் சமநிலை இல்லாததால் குழந்தை திருமணம் சமூகத்தில் ஒரு எதார்த்தமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
 
ஐபிசி பிரிவு 375இன் படி 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி வன்கொடுமையாகவே கருதப்படுகிறது. இருப்பினும் 2வது விதிவிலக்கின்படி 15 வயதுக்கு மேல் உள்ள பெண்ணுடன் அவளுக்கு திருமணமான ஆண் பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையாக கருதப்படாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்