வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (13:26 IST)
இன்று காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
வங்க கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அழ்ந்த காற்றழுத்த மண்டலமாக உருவான நிலையில் அது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டது. இந்த புயல் ஆந்திரா - ஒடிசா இடையே கரையைக் கடந்தது. 
 
குலாப் புயல் கரையை கடந்துவிட்டாலும் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனிடையே தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 
 
இன்று காலை உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments