Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (13:26 IST)
இன்று காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
வங்க கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அழ்ந்த காற்றழுத்த மண்டலமாக உருவான நிலையில் அது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டது. இந்த புயல் ஆந்திரா - ஒடிசா இடையே கரையைக் கடந்தது. 
 
குலாப் புயல் கரையை கடந்துவிட்டாலும் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனிடையே தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 
 
இன்று காலை உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments