Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலும் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்: 2 பேருக்கு பாதிப்பு என தகவல்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (20:10 IST)
சீனாவில் தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
கடந்த சில நாட்களில் மட்டும் சீனாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் உயிரிழந்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் சீன ஊடகங்கள் அதை மறைத்து தாகவும் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் சீனாவை அடுத்து தற்போது இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது. குஜராத் மற்றும் ஒரிசாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அடைந்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குஜராத்தில் இரண்டு நபர்களும் ஒரிசாவில் ஒரு நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சீனாவை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான்  வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இதனை அடுத்து மத்திய அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments