Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சத்தை நெருங்கி தடாலென கவிழ்ந்த அதானி பங்குகள்! – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (12:20 IST)
அதானி நிறுவனத்தின் பங்குகள் உயர்வை சந்தித்து வந்த நிலையில் இன்று திடீரென பெரும் சரிவை சந்தித்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபலமான அதானி நிறுவனத்தின் ஷேர் மார்க்கெட் பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தன. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட அதானி பங்குகள் பெரும் ஏற்றத்தை சந்தித்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அதானி பங்குகள் வேகமாக உயரத் தொடங்கிய நிலையில் முதலீட்டாளர்கள் பலர் அதானி நிறுவனங்கள் மீது முதலீடு செய்தனர்.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டு பங்கு முதலீடு நிதி நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. அதானிக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் 5% முதல் 20% வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால் அதானி குழுமம் மீது முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பல கோடி நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments