சரிவிலிருந்து மீண்டு வரும் அதானி குழுமம்.. பங்குகள் உயர்வு

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (19:37 IST)
கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் மிக மோசமாக சரிந்த நிலையில் இன்று ஓரளவு அதானி குழுமத்தின் பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கைக்கு பின்னர் அதானி குழுமத்தின் பங்குகள் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்தது என்பதும் இதனால் உலக பணக்காரர் வரிசையில் 20 இடத்திற்கு கீழே அவர் தள்ளப்பட்டார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் குறிப்பாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் என்று உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அதானி நிறுவனத்தின் மற்ற நிறுவனத்தின் பங்குகள் 5% முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் அதானி கேஸ் பங்கின் விலை மட்டும் ஐந்து சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
110 கோடி டாலர் மதிப்பிலான கடன்களை முன்கூட்டியே செலுத்த இருப்பதாக அதானி வெளியிட்ட அறிக்கையின் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments