Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பிரச்சாரம் செய்யாத குஷ்பு.. தெலுங்கானாவில் மட்டும் பிரச்சாரம் ஏன்?

Siva
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (11:47 IST)
தமிழகத்தில் சில நாட்கள் மட்டும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பூ அதன் பின்னர் உடல்நிலை காரணமாக பிரச்சாரம் செய்யவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைதளங்கள் மூலம் வாக்கு திரட்டுவேன் என்றும் கூறியிருந்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு குஷ்பு தற்போது பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பூ பல பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தில் உடல்நிலையை காரணம் காட்டி பிரச்சாரம் செய்யாத குஷ்பூ தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன் என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய தொகுதியில் போட்டியிட குஷ்பூ விண்ணப்பம் செய்திருந்ததாகவும் ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் ஏற்பட்ட வருத்தத்தில் தான் அவர் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments