Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் நீதிபதியிடம் நடிகை பாவனா ரகசிய வாக்குமூலம்

பெண் நீதிபதியிடம்  நடிகை பாவனா ரகசிய வாக்குமூலம்
, திங்கள், 20 பிப்ரவரி 2017 (11:39 IST)
கேரளாவை சேர்ந்த நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மலையாள நடிகை பாவனா தமிழில் வெயில், தீபாவளி, ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின் சரியான வாய்ப்பில்லாமல் அவர் மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வந்தார். இவர் கேரளாவில் அன்காமலி என்ற பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த 17ம் தேதி இரவு படப்பிடிப்பு முடிந்து அவர் காரில் வீடு திரும்பும்போது, பின் தொடர்ந்து வந்த வேன் ஒன்று இவர்கள் கார் மீது மோதியது. இதனால் பாவனாவின் கார் டிரைவர் காரை நிறுத்தினார். திடீரென வேனில் இருந்த மர்ம நபர்கள் பாவனாவின் காரில் ஏறி வண்டியை எடுத்துச் சென்றனர். அப்போது காரில் ஏறியவர்கள் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி அதனை வீடியோவாகவும் எடுத்தனர். பின்னர் காரை வழியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட பாவனா இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் 7 பேர் வரை ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து நடிகை பாவனாவிடம் காளமேடு நீதிமன்ற பெண் மாஜிஸ்திரேட்டு ரகசிய வாக்குமூலம் வாங்கினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடியை வைத்து எத்தனை மாதம் ? - வைரைல் புகைப்படம்