Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடப்பாடியை வைத்து எத்தனை மாதம் ? - வைரைல் புகைப்படம்

எடப்பாடியை வைத்து எத்தனை மாதம் ? - வைரைல் புகைப்படம்
, திங்கள், 20 பிப்ரவரி 2017 (11:38 IST)
சசிகலா தரப்பில் முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தற்போது தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் கடந்த 10 நாட்கள் தமிழக அரசியல் பரபரப்பாகவே இருந்தது. அந்த பரபரப்பு கடந்த 18ம் தேதி முடிவிற்கு வந்தது.
 
2016ம் ஆண்டு ஆட்சி அதிமுக அமைத்தவுடன் ஜெயலலிதா முதல்வரானார். அவரின் மறைவிற்கு பின் ஓ.பன்னீர் செல்வம்  முதல்வரானார். சசிகலா தரப்பிடம் அவருக்கு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி இருக்கிறார். தேர்தல் முடிந்து இதுவரை 3 முதல்வர்கள் மாறிவிட்டார்கள்.

webdunia

 

 
அவரோடு இது நிற்காது எனவும், விரைவில் சசிகலாவின் உறவினரும், அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தினகரனை முதல்வராக முன்னிறுத்தும் வேலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், இது பற்றி தமிழகத்தின் ஏதே ஒரு இடத்தில் ஒரு பலகை வைக்கப்பட்டுள்ளது அதில் “ டெட் பாடியை வைத்து 3 மாதம், எடப்பாடியை வைத்து எத்தனை மாதம்?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
 
அதாவது, ஜெ.இறந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும், 3 மாதம் மக்களை ஏமாற்றினார்கள் என்ற செய்தி இன்னும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில்தான், இப்படி ஒரு போர்டை அந்த ஊர் மக்கள் வைத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது; நீதிமன்றத்தில் திமுக வழக்கு - நாளை விசாரணை